இந்தியா

எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது: எல்.கே.அத்வானி

DIN

புது தில்லி: எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வு குறித்து பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக அயோத்தியில் நாளை (புதன்கிழமை) பூமிபூஜை நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிய தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என்று ராமர் கோவில் பூமி பூஜைநிகழ்வு குறித்து பாஜக மூத்த தலைவர்  எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. எனக்கு மட்டுமின்றி, நாட்டு மக்களுக்கும் இது வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர்கோவில் அமைவதற்கு தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை கால பயிா்களில் வெப்ப தாக்கத்தை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்கள்

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

SCROLL FOR NEXT