இந்தியா

இந்திய ஹாக்கி அணித் தலைவர் உள்ளிட்ட ஐவருக்கு கரோனா பாதிப்பு

DIN

இந்திய ஹாக்கி அணியின் தலைவர் மன்பிரீத் சிங் உட்பட ஐந்து இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்திய ஹாக்கி விளையாட்டு அணியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களான மன்பிரீத் சிங், சுரேந்தர் குமார், ஜஸ்கரன் சிங், வருண்குமார் மற்றும் கிருஷ்ணன் பி பகத் ஆகியோருக்கு பெங்களூரில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்[பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வீரர்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து பயிற்சிக்காக பெங்களூரு வந்த போது தொற்று பாதிப்புக்கு உள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் வைரஸ் தொற்றுக்குள்ளான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என்று இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்ஏஐ) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT