இந்தியா

முதல்வர் பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை

DIN

கரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கரோனா பரவலின் தீவிரம் குறையாத நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

நாளை காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார். 

தமிழகம் தவிர ஆந்திரம், பிகார், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT