காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்திலுள்ள மோலு சித்ரகம் பகுதியில் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இதில் அடையாளம் காணப்படாத பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது.