உத்தரகண்ட்: குழந்தையைக் கொன்ற சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது
உத்தரகண்டில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது.
உத்தரகண்டில் குழந்தையைக் கொன்ற சிறுத்தை சுட்டுக் கொல்லப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலம், பிரதாப் நகர் பகுதியில் சிறுத்தை ஒன்று கடந்த 3ஆம் தேதி குழந்தையை அடித்துக் கொன்றது. மேலும் சில விலங்குகளையும் சிறுத்தை கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த பீதியடைந்தனர்.
இதையடுத்து அந்த சிறுத்தையை வனத்துறையினர் நேற்று சுட்டுக்கொன்றனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி தேவால் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி சிறுத்தை ஒன்று குழந்தையைக் கொன்றது.
அதன் பின்னர் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். அத்துடன் மூன்று மாடுகளையும் ஒரு நாயையும் தாக்கிக் கொன்றது. நான்கு நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சிறுத்தையை வேட்டைக்காரர்கள் ஆகஸ்ட் 21ஆம் இரவு 11.30 மணியளவில சுட்டுக்கொன்றனர் என்றார்.