மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தில்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் ஞாயிற்றுகிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனைத்துவித பரிசோதனைளும் முடிந்த பிறகு ராம்விலாஸ் பாஸ்வான் இன்று வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
லோக் ஜன்சக்தி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த ஆண்டு விலகினார். பாஸ்வானுக்கு பின்னர் அவருடைய மகன் சிராக் குமார் பாஸ்வான் அப்பொறுப்பை ஏற்றார். ராம்விலாஸ் பாஸ்வானுக்கு ஏற்கெனவே சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்னைகள் உள்ளது.
இதற்காக அவர் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.