உ.பி.யில் சாலை விபத்து: 6 பேர் பலி, 8 பேர் காயம்
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் நடந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்துள்ளனர்.
ககோரி காவல் நிலையத்துக்குட்பட்ட லக்னௌ-ஹார்டோய் சாலையில் பேருந்துகள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகினர். 8 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஏசிபி எஸ்.எம் காசிம் அப்தி கூறியுள்ளார்.
மேலும், காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை ஒரு பேருந்து மற்றொரு பேருந்துடன் முந்திச் செல்ல முயன்றபோது இந்த விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.