தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை காலை வீடு திரும்பினார்.
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா, தில்லி அருகே குருகிராமில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இம்மாத தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைக்குப் பின், அவா் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டாா்.
அதன் பின்னா் மருத்துவா்களின் அறிவுரையை ஏற்று வீட்டுத் தனிமையில் இருந்து வந்த அவா், களைப்பு, உடல் வலி காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 18-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து அமித் ஷா முழுவதுமாக குணமடைந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.