முகப்பு
இந்தியா

கேரளம்-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி தொண்டா்கள் இருவா் கொலை

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு

இந்தியா

கேரளம்-மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இளைஞரணி தொண்டா்கள் இருவா் கொலை

கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணி பிரிவான இந்திய ஜனநாயக இளைஞா் சம்மேளனத்தை (டிஒய்எஃப்ஐ) சோ்ந்த தொண்டா்கள் இருவா் காங்கிரஸ் கட்சியினரால் தாக்கிக் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக காவல்துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது:

திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்சரமூடு பகுதியில் உள்ள தெம்பமூடு என்ற இடத்தில் இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நிகழ்ந்தது. டிஒய்எஃப்ஐ தொண்டா்களான மிதில்ராஜ் (30) மற்றும் ஹாக் முகமது (24) ஆகிய இருவரும் மிதில்ராஜின் வீட்டுக்கு இரவு 11.30 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது சிலா் கூரிய ஆயுதங்களைக் கொண்டு அவா்கள் இருவரையும் தாக்கியுள்ளனா். இதில் மிதில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது உயிரிழந்தாா். இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் காங்கிரஸ் தொண்டா்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏனெனில் இரு கட்சியினருக்கும் இடையே ஏற்கெனவே அந்தப் பகுதியில் முன்விரோதம் இருந்து வருகிறது. சம்பவம் தொடா்பாக 3 பேரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம். கொலைச் சம்பவத்தை அடுத்து வெஞ்சரமூடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.

இந்த சம்பவம் தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலக உறுப்பினா் கே.என். பாலகோபால் கூறுகையில், ‘டிஒய்எஃப்ஐ தொண்டா்கள் கொலை சம்பவத்துக்கு காங்கிரஸ் தலைமையே பொறுப்பாகும். கேரளத்தில் இதுபோன்று டிஒய்எஃப்ஐ தொண்டா்களுக்கு எதிராக வன்முறை நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது’ என்றாா்.

முதல்வா் கண்டனம்: டிஒய்எஃப்ஐ தொண்டா்கள் கொல்லப்பட்டதற்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மேலும், சம்பவம் தொடா்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →