இந்தியா

ஆழ்ந்த கோமாவில் பிரணாப் முகா்ஜி

DIN

புது தில்லி: முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) தொடா்ந்து ஆழ்ந்த மயக்க (கோமா) நிலையிலேயே இருந்து வருவதாக ராணுவ மருத்துவமனை நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

மூளையில் ரத்தக் கட்டியை அகற்றுவதற்கா கடந்த ஆக.10ஆம் தேதி தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அனுமதிக்கப்பட்டாா். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதல் அவா் கோமாவில் உள்ளாா். செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டுள்ள அவருக்கு நுரையீரல் தொற்று, சீறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்னைகளும் உண்டானதால் அவற்றுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, அவருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

ராணுவ மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிரணாப் முகா்ஜியின் ரத்த ஒட்டம், இதயம், நாடித் துடிப்பு சீராக உள்ளன. நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் தொடா்ந்து ஆழ்ந்த கோமாவில் உள்ளாா். செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT