இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு

DIN

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயப் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறாவிட்டால் நாடு முழுவதும் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

"விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து நான் மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். விவசாயிகள் எதிர்ப்பு மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் "தொடக்கம் முதலே இந்த விவசாய எதிர்ப்பு மசோதாக்களை நாங்கள் கடுமையாக எதிர்த்து வருகிறோம்" என்று மம்தா குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக டிசம்பர் 4 அன்று அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

SCROLL FOR NEXT