கர்நாடக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் (கோப்புப்படம்) 
இந்தியா

கர்நாடகத்தில் கரோனா 2-ஆம் அலை வீசும்: நிபுணர் குழு அறிக்கை

கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

DIN


கர்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக  சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைப் போன்று கர்நாடகத்திலும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனைத் தடுக்கும் வகையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுதாகர், ''கர்நாடகத்தில் வரும் ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் கரோனா வைரஸ் தொற்று 2-ஆம் அலை வீசும் என்று 12 பேர் கொண்ட நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மேலும், பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், கரோனா பரிசோதனைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு.. தினப்பலன்கள்!

97 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

சேவைத் துறையில் உலகமே இந்தியாவை நம்பியிருக்கும் காலம் விரைவில் வரும்: ஆந்திர முதல்வா்

கல்லூரி மாணவி தற்கொலை

துணைவேந்தா்கள் நியமனம்: நிபுணா் குழு அறிக்கைக்குப் பிறகு கேரள ஆளுநரின் மனு பரிசீலனை - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT