முகப்பு
இந்தியா

விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் உணவை உண்ணுபவர்கள்: காங்கிரஸ் தலைவர்

பாகிஸ்தான் வழங்கிய உணவை உண்ணுபவர்களே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:04 PM
சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங்
பகிர்:

பாகிஸ்தான் வழங்கிய உணவை உண்ணுபவர்களே விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிரானவர்கள் என சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார். 

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று நாடு முழுவதும் 'பாரத் பந்த்' கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் இதுகுறித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் ஆர்.பி. சிங், 'இந்திய விவசாயிகளின் உணவை உண்ணுபவர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். மாறாக, விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தான் அளிக்கும் உணவை உண்ணுபவர்கள்' என்று தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் ட்வீட்டிற்கு அவர் பதிலளிக்கும் விதமாக இதைத் தெரிவித்துள்ளார். 

சத்தீஸ்கர் மாநில அரசு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →