ஹைதராபாத் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பலர் காயம் 
இந்தியா

ஹைதராபாத் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; பலர் காயம்

ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

ENS


ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பொல்லாராம் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் பல தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

விந்தியா ஆர்கானிக் என்ற ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

தீப்பற்றிய ரசாயன ஆலைக்குள் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்டமாக மூன்று தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளன. தீ விபத்து குறித்து தங்களுக்கு நண்பகல் 1.30 மணிக்கு தகவல் வந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரசாயன ஆலையில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து தீப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. வெடிச்சத்தம் கேட்ட போது, ரசாயன ஆலையின் மேற்கூரை பிய்ந்து காற்றில் பறந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வீடு கட்டிய அய்யனார் துணை சீரியல் நடிகை!

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

SCROLL FOR NEXT