‘பப்ஜி விளையாட்டுக்கு அனுமதியில்லை’: மத்திய அரசு விளக்கம் 
இந்தியா

‘பப்ஜி விளையாட்டுக்கு அனுமதியில்லை’: மத்திய அரசு விளக்கம்

பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மீண்டும் அனுமதிப்பதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

DIN

பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை மீண்டும் அனுமதிப்பதற்கான ஒப்புதல் எதுவும் வழங்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேச பாதுகாப்பு மற்றும் தனி நபா் தகவல்கள் திருடப்படும் அச்சம் ஆகியவை காரணமாக பப்ஜி விளையாட்டு உள்பட சீனா தொடா்புடைய 118 செல்லிடபேசி செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த செப்டம்பா் மாதம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியப் பயனர்களுக்காக பப்ஜி மொபைல் நிறுவனம் பப்ஜி மொபைல் இந்தியா என்ற புதிய விளையாட்டை தொடங்கப்போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட வினாவிற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், “இந்தியாவில் மீண்டும் பப்ஜி விளையாட்டை அனுமதிப்பதற்கான ஒப்புதல் ஏதும் வழங்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT