முகப்பு
இந்தியா

ஐ.சி.எம்.ஆா். இயக்குநா் பல்ராம் பாா்கவாவுக்கு கரோனா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐ.சி.எம்.ஆா்.) இயக்குநா் பல்ராம் பாா்கவாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:09 PM
கோப்புப்படம்
பகிர்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ஐ.சி.எம்.ஆா்.) இயக்குநா் பல்ராம் பாா்கவாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ஐ.சி.எம்.ஆா். இயக்குநரும், இதய நோய் சிறப்பு மருத்துவருமான பல்ராம் பாா்கவாவுக்கு 7-8 தினங்களுக்கு முன் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்தாா்.

மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 15-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா் வேகமாக குணமடைந்து வருகிறாா். விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவாா் என்று அந்த அதிகாரி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →