இந்தியா

மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை? பிரியங்கா

DIN

குடியரசுத் தலைவரை சந்திக்க மக்கள் பிரதிநிதிகளை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் மக்கள் பிரச்னைகளுக்காகவே குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணி மேற்கொண்டனர் என்றும் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் பிரச்னைகளுக்காக குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதியில்லையா?. விவசாயிகளின் பிரச்னைகளுக்காக குரல்கொடுத்து இந்த பேரணி மேற்கொள்ளப்பட்டது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நாட்டு மக்கள் எம்.பி.க்களை தேர்வு செய்தனர். மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க உரிமையுள்ளது. அவர்கள் அனுமதிக்கப்படவேண்டும். இதில் அரசுக்கு என்ன பிரச்னை?. எல்லையில் லட்சக் கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க அரசுக்கு விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

முன்னதாக, விவசாயிகள் போராட்டத்தில் தலையிட்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக குடியரசுத் தலைவரிடம் 2 கோடி கையெழுத்துகளை அளிக்க பேரணி மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT