தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா
தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுபற்றி மருத்துவமனை அதிகாரிகள் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:
"புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தனி வார்டில் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 20 பேர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்."
Advertisement
புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களைத் தனிமைப்படுத்துவதற்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 2,000 படுக்கை வசதிகளை தில்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.