முகப்பு
இந்தியா

தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா

தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோப்புப்படம்
பகிர்:


தில்லியில் 4 பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி மருத்துவமனை அதிகாரிகள் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது:

"புதிய வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டவர்கள் தனி வார்டில் வெவ்வேறு அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 20 பேர் பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள். மற்றவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள்."

Advertisement

புதிய வகை கரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களைத் தனிமைப்படுத்துவதற்காக லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் 2,000 படுக்கை வசதிகளை தில்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments