முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கரோனா 

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
கோப்புப்படம்.
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 3,509 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று புதிதாக 3,509 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19,32,112 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 58 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 49,521 ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இன்று 3612 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் மொத்த எணிண்கை 18,28,546ஆக உயர்ந்துள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 52,902 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 75,374 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதுவரை மொத்தம் 1,27,47,633 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மும்பையில் இன்று 714 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 9 பேர் பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments