கேரளத்தில் சாலை விபத்து: 3 பேர் பலி
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் லாரி ஒன்று அடுத்தடுத்து வந்த வாகனங்களின் மீது தாக்கிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் லாரி ஒன்று அடுத்தடுத்து வந்த வாகனங்களின் மீது தாக்கிய விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.
லாரி ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பாலக்காடு மற்றும் திருச்சூர் நெடுஞ்சாலைக்கு இடையில் இடத்தில் கார்கள் உள்ளிட்ட பிற வாகனங்களில் மோதியதாக கூறப்படுகிறது.
இது மேலும், சில இருசக்கர வாகனங்களையும் தாக்கியதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காலை 6.50 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மற்றும் கார் ஓட்டுநர் பலியாகியுள்ளார். மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் இங்குள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணத்தை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.