முகப்பு
தமிழ்நாடு

நடிகரின் கட்சி கணக்கிலேயே இல்லை: எஸ்.பி. வேலுமணி

கோவையில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் திமுகவும் தவெகவும் நிறுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

Updated On : 2 ஏப்ரல் 2026, 6:43 pm IST
எஸ்பி வேலுமணி - X | SP Velumani
பகிர்:

கோவையில் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை தேர்தலில் திமுக நிறுத்தியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

கோவையில் தேர்தல் பிரசாரத்தில் எஸ்பி வேலுமணி பேசுகையில், "தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரை திமுகவினர் இறக்கியுள்ளனர்.

அதேபோல், புதிதாய் வந்துள்ள கட்சியை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் கணக்கிலேயேயில்லை.

Advertisement

Advertisement

எதிர்க்கட்சியிலும் (திமுக) நடிகர் கட்சியிலும் வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைத்தான் இறக்கியுள்ளனர்.

ஆனால், நம்முடைய வேட்பாளர் இந்த மண்ணின் மைந்தன், மக்களோடு மக்களாக பழகக் கூடியவர்; கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். நமக்கு வெற்றி உறுதி.

இருப்பினும், நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பாடுபட வேண்டும். நமக்குள் சிறுசிறு பிரச்னைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மறந்துவிட வேண்டும்.

இங்கு அதிமுகவின் தலைமையில்தான் கூட்டணி. ஆகையால், பாஜகவின் பொறுப்பாளருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

summary

ADMK Leader S.P. Velumani states that the actor's party is not even a factor.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.