முகப்பு
இந்தியா

மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு: மத்திய நிதியமைச்சர்

2024 - 25ம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:41 PM
ta24boat1_ch0007_24chn_4_637102168267090364
பகிர்:


புது தில்லி: 2024 - 25ம் நிதியாண்டில் இந்தியாவின் மீன் உணவுகள் ஏற்றுமதியை ரூ.1 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் 2022 - 23ம் நிதியாண்டில் மீன் உணவுகள் உற்பத்தியை 200 லட்சம் டன்களாக உயர்த்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சாகர் மித்ரா எனும் புதிய திட்டம் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்.  மீன் உணவு தொடர்பான தொழிலில் இளைஞர்களும் ஊக்குவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.