முகப்பு
இந்தியா

மொஹாலியில் 3 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

பஞ்சாப் மொஹாலியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:46 PM
பகிர்:

சண்டிகர்: பஞ்சாப் மொஹாலியில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 

காரர்-லாண்ட்ரான் சாலையில் அமைந்துள்ள இந்த கட்டடத்தின் அடியில் ஜே.சி.பி இயந்திரத்தை வைத்து அதன் அடித்தளத்தைத் தோண்டும்போது, இந்த கட்டடம் இடிந்து கீழே விழுந்துள்ளது.

இதில், 8 பேர் வரை இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய மீட்புப் படை தீவிரம் காட்டி வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.