இந்தியா

காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஒருவர் பலி

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. 

இந்நிலையில், இன்று காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்து பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 

தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். 

துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT