இந்தியா

திரிபுராவில் 889 கிலோ கஞ்சா பறிமுதல், 4,500 கஞ்சா செடிகள் அழிப்பு

DIN

திரிபுராவில் ரூ.44,45,000 மதிப்புள்ள 889 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தது மட்டுமல்லமாமல் 4,500 கஞ்சா செடிகளை அழித்து எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

செபாஹிஜாலா மாவட்டத்தில் எஸ்.டி.எஃப்.ஓ சோனாமுரா மற்றும் வனப் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றுடன் பிஎஸ்எஃபின் 74ஆவது பட்டாலியன் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில் 2,250 கிலோ எடையுள்ள 4,500 முதிர்ந்த கஞ்சா செடிகளை அழித்தனர். இதன் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.1,12,50,000 ஆகும்.

மேலும், இந்த சோதனையின்போது இருசக்கர வாகனம் மற்றும் கஞ்சா பயிரிடப் பயன்படுத்தப்பட்ட பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT