முகப்பு
இந்தியா

பிகாரில் சாலை விபத்து: உடல் நசுங்கி 3 பேர் பலி

பிகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:24 PM
பகிர்:

பிகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதி 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 

பெகுசராய் மாவட்டம், பஞ்சமுகி தோலா அருகே நேற்றிரவு 10 மணியளவில் மூன்று பேர் சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு, திடீரென அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர்கள் மீது வேகமாக மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராஜ்குமார் சாஹ்னி(41), ராஜா சாஹ்னி(26) மற்றும் தீனா சாஹ்னி(24) ஆகிய மூவர் வாகனம் மோதி உயிரிழந்தவர்கள் என போலீஸாரல் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து அப்பகுதியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.