இந்தியா

மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகம் தீ வைத்து எரிப்பு

DIN


மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜகவின் இந்த குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அசன்சோல் பகுதியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது பிடிக்காமல் திரிணமூல் காங்கிரஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது என்று பாஜக தலைவர் கோபால் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து வருவது ஆளும் கட்சிக்கு பிடிக்கவில்லை என்றும் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் போலீஸார் மிகவும் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இருப்பினும், பாஜக தலைவர் கூறிய குற்றச்சாட்டை திரிணமூல் கட்சித் தலைவர் ஹரேராம் திவாரி மறுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

SCROLL FOR NEXT