இந்தியா

மணிப்பூரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது; போலீஸார் தீவிர விசாரணை

DIN

மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்பால் நகரின் மேற்கே நாகமபால் ரிம்ஸ் சாலை அருகே இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்தது. தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு வைத்தவர் யார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதுமிலை எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீஸாரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாத இறுதியிலும் இம்பாலில் மார்க்கெட் அருகே வெடிகுண்டு வெடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT