ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ஒடிசாவில் கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கஞ்சம் மாவட்டத்தில் மேலும் இரண்டு பேர் பலியாகியுள்ள நிலையில், கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 494 பேருக்குத் தொற்று பாதித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு 15,392 ஆக அதிகரித்துள்ளன. இதில் உள்ளூரில் 172 பேரும், 322 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்தும் பதிவாகியுள்ளது. இதுவரை 10,476 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.