இந்தியா

உத்தரப்பிரதேசம் ஷாஜகான்புர் பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஹ்ஜஹன்புர் மாவட்டம் சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். ஒரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

IANS


ஷாஹ்ஜஹன்புர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்புர் மாவட்டம் சௌக் கோட்வாலி பகுதியில் உள்ள வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே வீட்டைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். ஒரு குழந்தை காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு ஒரு குடும்பத்தினர் உறங்கிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டின் செங்கல் சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். குழந்தை மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங் தெரிவித்துள்ளார்.

சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத், ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் அடிறிவித்துள்ளார். படுகாயமடைந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜமா இயக்குநரின் புதிய பட போஸ்டர்!

எதிர்க்கட்சியின் போராட்டத்தில் காயமடைந்த கேரள அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

பாரிஜாதம் தொடரின் புதிய நாயகன் அக்‌ஷய் கமல்!

நல்லகண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்!

அக்‌ஷர் படேல் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும்: ரவி சாஸ்திரி

SCROLL FOR NEXT