விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது: உச்ச நீதிமன்றத்தில் உ.பி. காவல்துறை
ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
புது தில்லி: ரௌடி விகாஸ் துபே என்கவுண்டரை போலி என்று சொல்ல முடியாது என உச்ச நீதிமன்றத்தில் உத்தரப் பிரதேச மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது உத்தரப்பிரதேச காவல்துறை இன்று விரிவான அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த பதில் அறிக்கையில், என்கவுண்டர் நடந்தது மிகச் சரியானதே. மற்றும் வேறு வழியில்லாமல் நடத்தப்பட்டது, அதை போலி என்கவுண்டர் என்று சொல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.