முகப்பு
தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி
இந்தியா

தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி

தெலங்கானாவில் கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு தனது கணவர், மாமனார், மாமியாரை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்.

இந்தியா

தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி

தெலங்கானாவில் கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு தனது கணவர், மாமனார், மாமியாரை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
தெலங்கானா: கரோனாவுக்கு கணவர், மாமனார், மாமியாரை இழந்த கர்ப்பிணி
பகிர்:


வாரங்கல்: தெலங்கானாவில் கரோனாவின் கோரத் தாண்டவத்துக்கு தனது கணவர், மாமனார், மாமியாரை இழந்து சொல்லொணாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார் கர்ப்பிணிப் பெண்.

தெலங்கானா மாநிலம் வாரங்கல் பகுதியில், ஒரே வாரத்தில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மரணம் அடைந்துள்ளனர். 

ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண், தன்னுடன் பணியாற்றும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியர் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்திருந்த நிலையில், கணவர் காய்ச்சல் காரணமாக ஜூலை 2-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, கணவரின் தந்தைக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் மரணம் அடைந்தார். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாமியார், அதற்கு அடுத்த நாளே மரணம் அடைந்தார். 

வீட்டில் அடுத்தடுத்து நேரிட்ட இருவரின் மரணத்தால் கடும் அதிர்ச்சி அடைந்த கர்ப்பிணிக்கு அடுத்த பேரதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரும், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

ஒரே வீட்டில் 3 பேரை இழந்து கர்ப்பிணி பெண், தன்னந்தனியாக தவிக்கும் நிலை, அந்தப் பகுதிகளை மக்களை கடும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தெலங்கானாவில் வாரங்கல் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →