முகப்பு
இந்தியா

இதுவரை பார்த்திராத அரிய மஞ்சள் நிற ஆமை ஒடிசாவில் தென்பட்டது

ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:58 PM
இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை ஒடிசாவில் தென்பட்டது
பகிர்:


ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரை, பல்வேறு விதமான உயிர்கள் வாழும் மிகவும் அதிசயமானப் பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான ஆமைகள் தென்படுவது வழக்கம்தான். ஆனால், முதல் முறையாக கடந்த ஞாயிறன்று, இதுவரை பார்த்திராத மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக தென்படும் ஆமைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. பாலாசோர் பகுதியில் சுஜன்புர் கிராமத்தில் மிகவும் அழகான, அரிதான, முற்றிலும் மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது விவசாயி வாசுதேவ் மஹாபத்ரா இந்த ஆமையை பார்த்துள்ளார். பிறகு இந்த ஆமையை அவர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதேப்போல சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் இளஞ்சிவப்பு நிற கண்களைக் கொண்ட ஆமை கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →