இந்தியா

ஆப்கனில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ANI

வடக்கு ஃபரியாப் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர் என்று ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

டவ்லத் அபாத் மற்றும் அல்மர் மாவட்டங்களில் இந்த மோதல்கள் நடைபெற்றன. தலிபான்கள் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர். இந்த தாக்குதலுக்குப் பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். 

இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 17 தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், தலிபான் ராணுவ தளபதி உள்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலில் மூன்று இருசக்கர வாகனங்கள் மற்றும் தலிபான் குழுவின் முகாம்கள் அழிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

SCROLL FOR NEXT