இந்தியா

புதுதில்லியில் மேலும் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு 

DIN

நாட்டின் தலைநகர் புதுதில்லியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1195 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதுதில்லியில் 27 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை தற்போதைய நிலவரப்படி 10 ஆயிரத்து 705 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 930 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இதுவரை 3 ஆயிரத்து 963 பேர் கரோனா பாதிப்பால் பலியாகி உள்ளனர் அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT