முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 1986 பேர் பாதிப்பு

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:02 PM
தெலுங்கானாவில் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு
பகிர்:

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1986 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 1,986 பேர் காரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் காரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்து 703 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 10 ஆயிரத்து 632 பேர் கரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஒரே நாளில் 816 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மாநிலத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்து 380 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 4 லட்சத்து 37 ஆயிரத்து 582 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →