ஜார்க்கண்டில் கரோனா பாதிப்பு 635-ஐ எட்டியது!
ஜார்கண்டில் மேலும் 25 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையை 635 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரச் செயலாளர் நிதின் மதன் குல்கர்னி தெரிவ
ஜார்கண்டில் மேலும் 25 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 635 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரச் செயலாளர் நிதின் மதன் குல்கர்னி தெரிவித்தார்.
புதிய வழக்குகளில், இரண்டு சாஹெப்கஞ்ச் மற்றும் தன்பாத்தைச் சேர்ந்த 23 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,392 பேருக்குப் புதிதாக கரோனா வைரஸ் தொற்றும், 230 இறப்புகளும் பதிவாகியுள்ளது. இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,90,535 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.