முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் ஒரேநாளில் 3,007 பேருக்கு கரோனா தொற்று

மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:45 PM
பகிர்:


மகாராஷ்டிரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரேநாளில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம், மும்பை மற்றும் தாராவியில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரம்:

மகாராஷ்டிரத்தில் புதிதாக 3,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 91 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 85,975 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 3,060 ஆகவும் உயர்ந்துள்ளது. 43,591 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மும்பை:

மும்பையில் இன்று புதிதாக 1,421 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 48,549 ஆக உயர்ந்துள்ளது. இதில், 25,717 பேர் சிகிச்சையில் உள்ளனர், 21,196 பேர் குணமடைந்துள்ளனர். 1,636 பேர் பலியாகியுள்ளனர்.

தாராவி:

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில், புதிதாக 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தாராவியில் மட்டும் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,912 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக யாரும் பலியாகவில்லை. இதன்மூலம், பலி எண்ணிக்கை 71 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →