இந்தியா

உ.பி.யில் புலம்பெயர் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

குஜராத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

PTI

பண்டா: குஜராத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

மோஹித் 19 வயதாக இளைஞர் சமீபத்தில் குஜராத்திலிருந்து அகமதாபாத்தில் உள்ள மாவ் கிராமத்திற்குத் திரும்பியிருந்தார். அங்கு அவர் பழங்களை விற்பனை செய்துவந்தார். 

இந்நிலையில், தான் தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அறையில் தொங்கியபடி காணப்பட்டதாக பாபெரு வட்ட அலுவலர் ராஜீவ் சிங் தெரிவித்தார். 

தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயந்திரங்கள் கொள்முதல் செய்ய ஜவுளி நிறுவனங்களுக்கு 20% மானியம்! - முதல்வர் அறிவிப்பு

ரூ. 822.70 கோடியில் அமையவுள்ள பிராட்வே பேருந்து நிலையத்தின் சிறப்பம்சங்கள்!

முதல் டி20: டிராவிஸ் ஹெட் கேப்டன்; மூன்று அறிமுக வீரர்களை களமிறக்கும் ஆஸி.!

மக்களிடம் கருத்து கேட்க தவெக தேர்தல் அறிக்கைக் குழு சுற்றுப்பயணம்!

உ.பி.யில் பிப்.9 முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்: பிப்.11ல் பட்ஜெட் தாக்கல்!

SCROLL FOR NEXT