இந்தியா

கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளைப் பயன்படுத்த தெலங்கானா, தில்லி முடிவு

கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தெலங்கானாவும், தில்லியும் பயன்படுத்தத் தயாராகியுள்ளன.

PTI


புது தில்லி: கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை தெலங்கானாவும், தில்லியும் பயன்படுத்தத் தயாராகியுள்ளன.

அவ்வாறு கரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வேயிடம் இருந்து தெலங்கானா மற்றும் தில்லி அரசுகள் கோரியுள்ளன. தெலங்கானா அரசு 60 ரயில் பெட்டிகளையும், தில்லி அரசு 10 ரயில் பெட்டிகளையும் கேட்டுள்ளன.

கரோனா அறிகுறி இல்லாதவர்களை இந்த ரயில் பெட்டிகளில் வைத்து கண்காணிக்கும் வகையில் தெலங்கானா மற்றும் தில்லி அரசுகள் ரயில் பெட்டிகளை வாங்க உள்ளன.

தெலங்கானாவின் செகுந்தராபாத், கச்சிகுடா, அடிலாபாத் ஆகிய பகுதிகளுக்கு 60 ரயில் பெட்டிகளும், தில்லிக்கு 10 ரயில் பெட்டிகளும் வழங்கப்பட உள்ளதாகவும், இதுவரை சுமார் 5,213 ரயில் பெட்டிகள் கரோனா வார்டுகளாக மாற்றப்பட்டிருப்பதாகவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT