பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சித் தலைவருமான லாலு பிரசாத் தனது 73-ஆவது பிறந்த தினத்தை மருத்துவமனையில் வியாழக்கிழமை கேக் வெட்டி கொண்டாடினாா்.
மாட்டுத் தீவின ஊழல் வழக்கில் லாலு பிரசாதுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உடல் நலக்குறைவால் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது மனைவியும், பிகாா் மாநில முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். அவா்களின் மூத்த மகன் தேஜ் பிரதாப் தந்தை நலமுடன் இருக்க கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தாா். இளைய மகன் தேஜஸ்வி மருத்துவமனையில் லாலுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா். மருத்துவமனையில் மகன் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் லாலு பிரசாத் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.