கோவிந்தராஜ சாமி கோவில் 
இந்தியா

தேவஸ்தான ஊழியருக்கு கரோனா: திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் மூடல்

தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

IANS

திருப்பதி: தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டின் கீழ் திருப்பதியில் உள்ள பத்து கோவில்களில் கோவிந்தராஜ சாமி பெருமாள் கோவிலும் ஒன்று. திருப்பதி வெங்கடசலபதி கோவில் உட்பட அனைத்து கோவில்களும், 80 நாட்கள் இடைவேளைக்குப் பிறகு கடந்த 8-ஆம் தேதியன்று திறக்கப்பட்டன.

இந்நிலையில் தேவஸ்தான ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது

இதுதொடர்பாக தேவஸ்தான தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி, தேவஸ்தான ஊழியரான சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கடந்த புதனன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டதோடு, அவரும் உடனடியாக கரோனா சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது கோவில் இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கபட்டுள்ளதோடு, கோவில் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் அபிஷேக் சர்மா..! இஷான், பிரெவிஸ், ஃபர்ஹான் முன்னேற்றம்!

நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!

ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

மிகவும் அழுத்தம் நிறைந்த போட்டியில் விளையாடவுள்ளோம்; இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்!

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெடித்த மோதல்: ஜம்மு காஷ்மீர் கேப்டனுக்கு 50% அபராதம்?

SCROLL FOR NEXT