புது தில்லி: குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஞாயிறு இரவு சிறிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியின் வடமேற்கே 122 கி.மீ தொலைவில் ஞாயிறு மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
அதேபோல ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆக பதிவாகியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.