சி.ஆர்.பி.எப் வீரர்கள் 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி
மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் 29 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 29 பேரையடுத்து, இதுவரை 620 சி.ஆர்.பி.எஸ் வீரர்கள் கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 189 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர். மேலும் 427 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை நான்கு சி.ஆர்.பி.எஸ் வீரர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.