ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் நிலநடுக்கம்
ஜம்மு-காஷ்மீரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 3.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 4.36 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது பூமிக்கடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக ஜம்மு – காஷ்மீர் பிரதேசத்தின் காத்ரா பகுதியின் கிழக்கே 90 கி.மீ தொலைவில் நேற்றிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.0 ஆக பதிவானது குறிப்பிடத்தக்கது.