இந்தியா

மாநிலங்களவைத் தேர்தல்: கரோனா பாதிப்பால் பாதுகாப்பு உடையுடன் வந்து வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. பாதுகாப்பு உடையுடன் வந்து மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களித்துள்ளார். 

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் காலியாக உள்ள 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் 36 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 19 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் 8 மாநிலங்களில் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்று காலியிடங்களுக்கு நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்க மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ. குணால் சவுத்ரி பாதுகாப்பு உடையுடன் வந்தார்.  கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவர் பாதுகாப்பு உடையுடன் சட்டமன்றத்துக்கு வருகை வந்து தேர்தலில் வாக்களித்துச் சென்றார். அவர் சட்டமன்றத்தை விட்டு வெளியேறிய பின்னர், சட்டமன்ற வளாகத்தை ஊழியர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT