கோப்புப்படம் 
இந்தியா

பிறந்து 54 நாள்களே ஆன குழந்தையை குடிபோதையில் தூக்கி எறிந்த தந்தை; உயிருக்குப் போராடும் குழந்தை!

கேரளத்தில் பிறந்து 54 நாள்களே ஆன குழந்தையை, குடிபோதையில் தந்தை தூக்கி எறிந்ததால் குழந்தை உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. 

DIN

கேரளத்தில் பிறந்து 54 நாள்களே ஆன குழந்தையை, குடிபோதையில் தந்தை தூக்கி எறிந்ததால் குழந்தை உயிருக்கு போராடும் நிலையில் உள்ளது. 

கேரளத்தைச் சேர்ந்த ஷைஜு தாமஸ்(40) கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக தனது குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். குழந்தைக்கு பலத்த அடி ஏற்பட்டிருந்ததை கவனித்த மருத்துவர்கள் சந்தேகித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து போலீஸார் விசாரித்ததில், குடிபோதையில் தாமஸ் தனது குழந்தையை தூக்கி எறிந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் தாமஸை கைது செய்தனர். அவர் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் உள்ளார். 

கேரளம் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை உயிருக்குப் போராடும் நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

கரூர் பலி: குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச் செயலர் ஆறுதல்!

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

SCROLL FOR NEXT