ஆமதாபாத் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில் (GIDC) புதன்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ஆமதாபாத்தில் உள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில் (GIDC) புதன்கிழமை காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் சனாந்த் பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்குள்ள குஜராத் மேம்பாட்டுக்கழக தொழிற்சாலையில் பயங்கர தீ ஏற்பட்டது. இதையடுத்து, தீ விபத்து குறித்து தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு 25 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
பல மணி நேரமாக எரியும் தீ விபத்தைத் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். தீ விபத்தில் கோடிக்கணக்கான பொருள்கள் எரிந்து நாசமானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தீ விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.