இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், அந்தந்த நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், இஸ்ரேல், தென் கொரியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான விமானங்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ரத்து செய்ய ஏர் இந்தியா முடிவு செய்துள்ளதாக விமான அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முன்னதாக, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட பெரும்பாலான ஐரோப்பிய வழித்தடங்களில் ஏர் இந்தியா தனது விமான சேவையை குறைத்தது. இதன் தொடர்ச்சியாக, தற்போது மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு தற்காலிகமாக விமான சேவையை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.