ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 2ம் தேதி ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மையத்தில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவருடன் பணியாற்றிய 30 மருத்துவர்கள், சில துணை மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கரோனா பாதித்த மருத்துவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.